TNPSC பயிற்சி நிறைவு விழா

விழி அமைப்பின் சார்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் குரூப் 4 தேர்வுக்காக இணையதளம் வாயிலாக நடத்தப்பட்ட 3 மாத பயிற்சியின் நிறைவு விழா 18.07.2022 அன்று நடைபெற்றது. விழியின் மாநிலச் செயலாளர் முனைவர் ஹுஸைன் பாஷா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமுமுக தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி P.M.பஷீர் அஹமது ஆகியோர் சிறப்பு விருந்தனர்களாக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். 

முன்னதாக, விழியின் துணைச் செயலாளர் பொறியாளர் அப்துல் சமது அவர்கள் வரவேற்புரையாற்ற, பயிற்சியாளர் ரஹமத்துல்லா (ரேடியண்ட் ஐ.ஏ.எஸ். அகாடமி, கள்ளக்குறிச்சி) அவர்கள் கருத்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளில் சிலர் பாடங்கள் வடிவமைக்கப்பட்ட விதம், நடத்தப்பட்ட முறை மற்றும் ஏற்பாட்டிற்காக நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் பொருளாளர் பேரா.அபுல் பாசல் அவர்கள் நிறைவுரையாற்றினார். 

இந்த பயிற்சித் திட்டத்தை ஏப்ரல் மாதத்தில் தொடக்கிவைத்த தமுமுக பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி, பயிற்சிகளை நடத்த ஊக்கப்படுத்திய தமுமுக பொருளாளர் பொறியாளர் சஃபியுல்லாஹ் கான், பயிற்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முபாரக் அலிகான், புதுமடம் ஹலீம் மற்றும் கபீர் ஆகியோருக்கு விழியின் சார்பாக நன்றிகள்.

Recorded Video: https://www.facebook.com/tmmkhqofficial/videos/598038455044139







Comments